1 மே, 2011

தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது


புதிய மெகஸின் சிறைச்சாலையில் தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்துவரும் அஞ்சலோவின் போராட்டம் இன்று 6 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

உடல்நிலை தளர்வடைந்த நிலையிலும் எதுவித ஆகாரமும் இன்றி தனது போராட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் நீதி அமைச்சர் அல்லது சட்டமா அதிபர் தன்னை நேரில் வந்து சந்தித்து தனது விடுதலை தொடர்பான கோரிக்கையை ஆராயவேண்டும் என தாம் விரும்புவதாகவும் அஞ்சலோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இவரது உண்ணாவிரத போராட்டத்தை பலாத்காரமாக முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்த போதும் கைதிகளின் எதிர்ப்பை அடுத்து அது கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக