1 மே, 2011

அரசியல் பிரமுகர்களின் ஜாதகங்கள் திருட்டு




இலங்கையின் மிகப் பிரபலமான பெண் ஜோதிடர்களில் ஒருவரான நிலூகா ஏக்கநாயக்க வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த அரசியல்வாதி களின் ஜாதகங்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மங்கள சமரவீர தனிக்கட்சி ஆரம்பித்தபோது, அதன் பொருளாளராகவும் நிலூகா பணியாற்றியுள்ளார்.

இலங்கையின் பிரபலமான ஜோதிடராக திகழும் இவரிடம், நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் ஆலோசனை கேட்டு வருவது வழக்கம்.

இந் நிலையில், அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்து ஜோதிடக் குறிப்புகள் மட்டும் திருடப்பட்டுள்ளன.

கட்சி வேறுபாடின்றி நிலூகா ஏக்கநாயக்க விடம் அரசியல்வாதிகள் ஜோதிட ஆலோசனை பெற்றுவருவது வழக் கம். அதன் காரணமாக முக்கியமான அரசியல்வாதிகள் பலரின் ஜாதக குறிப்புகள் அவரிடம் பாதுகாப்பாக இருந்தன.

இந் நிலையில், அவரின் வீடு உடைக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசியல்வாதிகளின் ஜாதகக் குறிப்புகள் மட்டுமே திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக