29 ஜூன், 2011

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56 ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3 சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக