29 ஜூன், 2011

சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும்: ஜனாதிபதி

அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள், இதேவேளை பொதுமக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதனை அனைத்து தூதுவர்களும் பார்த்துள்ளார்கள். பாதுகாப்பு தேடி வந்த மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை அவை படம் பிடித்துள்ளன. இந்த சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும். அதாவது சுடப்பட்டு விழுபவர் கவனமாகவே விழுகிறார். இது ஒரு திரைப்படத்தை தயாரிப்பதைப் போன்றே அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் படையினர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் இறுதி மோதலில் உள்ளவர்கள் வாழ்வா? சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியிலேயே இருந்தனர். எனவே அவர்களால் இத்தகைய துஷ்பிரயோகங்களில் ஈடுபட முடியுமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு கூறினார்.

இதனிடையே இந்த சனல்4 வீடியோவை நாம் ஒருபோதும் நம்பவில்லை. இது ஒரு திரைப்படமாகவே உள்ளது. எனினும் பொதுநலவாய அமைப்புக்கள் இதனை உண்மை என்று கூறுகின்றனவே என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வினவியபோது ஜனாதிபதி பதிலளிக்கையில்:

நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது தவறு என்பதை. பாலித கோஹன, சவேந்திர சில்வா ஆகியோர் இது போலி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். இறுதிக் கட்டத்தில் அங்கு இருந்தவர் என்பதால் சவேந்திர சில்வா இது குறித்து சவால் விட்டுள்ளார். அத்துடன் மூன்று பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, கடந்த காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் நாம் பலரை கைது செய்துள்ளோம். திருகோணமலை சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தோம். ஒரு படைப்பிரிவை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தோம். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை. இறுதியாக நாம் அவர்களை விடுவித்தோம். சாட்சியம் இருந்தால் வந்து கூறுங்கள் என நான் திரு. சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறானவர்களைத் தண்டிக்க உதவி புரியுமாறும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

எல்லோரும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்திரிகை மூலம் அறிக்கை விடுவதிலேயே குறியாக உள்ளனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக