29 ஜூன், 2011

தனியார் பஸ்களில் கமெரா பொருத்துவதற்கு ஏற்பாடு

தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல் வாதிகளின் படங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்குள் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்கும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை இனங்காண்பதற்குமே கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பஸ்களில் பல்வேறான முறைகேடுகள் இடம்பெறுவதாக தனியார் போக்குவரத்து அமைச்சுக்கு பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவ்வாறான முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சாதாரண பஸ் மற்றும் அரைசொகுசு பஸ்களை பயணிகள் இலகுவாக இனங்கண்டுகொள்வதற்கு அரைசொகுசு பஸ்ஸை சுற்றி விசேட ஸ்ரிக்கர் ஒன்றும் ஒட்டப்படும். அதுமட்டுமன்றி மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்குவதற்காக தனியார் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக