24 ஜூன், 2011

யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: குடிநீர், அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்கு பிரான்ஸ் உதவி 35 மில்லியன் யூரோக்களை பெற அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணம் மற் றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து 35 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச் சரவையின் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் உதவியோடு இரணைமடு குளத்தின் ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி செய் யப்படவுள்ளது. இதற்கென 20 மில்லி யன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப் பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கின்ற யாழ். மாவட்ட குடிநீர் விநியோக மேம்பாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர் வழங்கல் மற்றும் அடிப்படை சுகாதார வசதி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏற்கனவே 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இவ்விரு வேலைத்திட்டங்க ளுக்கும் அரசாங்கம் 20.04 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது. இந்த வேலைத்திட்டம் 164.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றது.

அதேநேரம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், லஹுகல, பதியத்தலாவ ஆகிய மூன்று பிரதேச செயலகங்களுக்கும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக