24 ஜூன், 2011

2000 கோடி ரூபாவில் குறைநிரப்பு பிரேரணை பாதுகாப்பு அமைச்சுக்கு சபையில் சமர்ப்பிப்பு



பாதுகாப்பு தலைமையக கட்டட நிர்மாணப் பணிகளுக்கென 2000 கோடி ரூபாவை பாதுகாப்பு அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று நேற்று பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சார்பில் ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன இப்பிரேரணையை சபையில் நேற்று சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அரச தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன பிரேரணையை சமர்ப்பித்த போது,

2011 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான நிதி ஆண்டினுள் அரசாங்கத்தின் இணைந்த நிதியிலிருந்தோ அல்லது அரசின் வேறு ஏதேனுமொரு நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சையும், பாதுகாப்பு நிறுவனங்களையும் விரைவில் மீளமைப்பதற்காகவும், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்காகவும் முறையாகவும் பயனுடையதாகவும் நிதி ஈடுபடுத்துவதை சான்றுபடுத்துவதற்காக காணிகள் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதிகளை கழிக்க முடிந்த விசேட கருத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து, பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயற்பாடுகளிலிருந்து அப்பாற்பட்ட அத்தகைய விசேட செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழான மதிப்பீட்டிற்கு பாதுகாப்பு தலை மையகக் கட்டமைப்பு’ எனும் பெயரில் விசேட கருத்திட்டமொன்றிற்கு ஒதுக்கீடுகள் பெற்றுக் கொள்ள வேண்டியுள் ளது.

இக்கருத் திட்டம் 2011, 2012 ஆண்டுகளில் செயற்படுத்தவுள்ளதோடு அதற்காக 2011 ஆம் ஆண்டில் ரூபா பில்லியன் 20 ஆன முழுப் பெறுமதியுடைய குறை நிருப்பு ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளல் என்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விளக்கமளித்துள்ளார்.நிதியத்தினால் அல்லது பெற்றுக் கொள்ளும் ஏதேனும் கடன் தொகையினால் 2000 கோடி ரூபாவை குறைநிரப்பு தொகையாக பெற்றுக் கொள்ளல் என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக