24 ஜூன், 2011

அதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சுரேஷ்பிரேமச்சந்திரன் செவ்வி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக, மாகாணசபை களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் ததேகூ சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மாகாண சபைக்கான அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்று தெளிவான வரையறை இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அதற்கு மாற்றாக, மாகாணசபை, மத்திய அரசு என்கிற இரண்டு அதிகார பட்டியல் தவிர இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்று இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு கூறுவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக