23 ஜூன், 2011

அரசு - த. தே. கூ . இன்று பேச்சு

அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்ப டையில் பேச்சுக்களைத் தொடர்வ தாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை யென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற் கான களத்தை உருவாக்குமென்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதற்காகப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவொன்றை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகுமென்பதே கூட்டமைப்பின் தற்போதைய கருத்தாகுமென்று தெரிவித்த அவர் அது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லையென்றும் அறிவிக்கும் போது அதுபற்றிச் சிந்திக்கலாமென்றும் கூறினார்.அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் கூறவில்லை என்று வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். இதனையே சம்பந்தன் எம்.பி. தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக