24 ஜூன், 2011

அளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது


அளவெட்டி தாக்குதல் சம்பவம் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அளவெட்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறு கின்றன.

இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்றுமுன்தினம் பாரா ளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தார். எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை மற்றொரு ஊடகவியலாளர் கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனை செய்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

அச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்றன மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டால் இச்சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகளை பாதிக்கும். அதனால் அந்த அறிக்கை உரிய நேர காலத்தில் வெளியிடப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக