26 மே, 2011

போலி கடவுச்சீட்டு: இலங்கை பெண் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து கொழும்பு செல்ல முயன்ற இலங்கைப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் விமானமொன்று புறப்படுவதற்கு தயாராகவிருந்தது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதி காரிகள் சோதனையிட்டபோது வசந்தி (வயது 42) என்ற இலங்கைப் பெண்ணொருவர் இந்திய கடவுசீட்டை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விமான நிலைய பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கை பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது தெரியவந்ததாவது,

இலங்கையை சேர்ந்த வசந்தி மஸ்கட்டில் பணியாற்றியபோது அங்கிருந்த ராமுலு என் பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து கிருஷ்ணகிரியில் தங்கி விட்ட இவர், தான் இலங்கை பெண் என்பதை மறைத்து இந்திய கடவுசீட்டை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் அக்கடவுச்சீட்டை பயன்படுத்தி இரு முறை இலங்கையில் உள்ள தங்கை வீட்டிற்கும் அவர் சென்று வந்துள்ளார்.

அதனைத் தொடந்து அவர் மீண்டும் இலங்கைக்கு செல்லவிருந்த போதே விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக