26 மே, 2011

எண்ணாயிரம் முஸ்லிம்களின் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி கைது

போர் குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பாவினால் தேடப்படும் மிக முக்கிய நபர்களில் ஒருவரான முன்னாள் பொஸ்னிய சேர்ப்ஸ் இராணுவ ஜெனரல் ரெட்கோ மிளடிக் தமது நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேர்பியா அறிவித்துள்ளது.

ரெட்கோ மிளடிக் பொஸ்னிய சிவில் யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்களில் இழைத்தமையின்பேரில் தேடப்பட்டு வந்த நபர் ஆவார்.

பொஸ்னியாவின் 'ஸ்ரெப்ரெனிகா' நகரில் 1995 ஆம் ஆண்டில் சுமார் 8,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கான கட்டளையை ரெட்கோ மிளடிக்கே வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சுமார் 10 வருடங்கள் தலைமறைவாகியிருந்த இவர் பொஸ்னிய யுத்தத்தின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களின் பிரதான சூத்திரதாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வந்த இவர் மீது இனப்படுகொலை, மனித உரிமை மீறல் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக