26 மே, 2011

இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான நெருங்கிய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் இந்த நட்புறவைச் சீர்குலைக்கும் செயற்பாடுக ளையே ஜே. வி.பி. மேற்கொள்வதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க இலங்கை- இந்திய வெளிநாட்டமைச்சர் களின் அண்மைய கூட்டறிக்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்று கையில், இவ்வறிக்கையானது இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா தலையீடு செய்வதையே காட்டுகிறது எனவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதால் அவர் நாடு திரும்பி யதும் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளிப்பார் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக