26 மே, 2011

விசாக்களின்றி சிங்கப்பூரில் தங்கியிருந்த 48 இலங்கையர் கைது

சிங்கப்பூரில் விசாக்களின்றி தங்கியிருந்த 48 இலங்கையர்கள் கடந்த திங்கட் கிழமை சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்கு விடுதிகளையும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 1570 வரையான வயது பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக