26 மே, 2011

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் நியாயமானது: பொன்சேகா

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நியாயமானது. அவர்கள் விடயத்தில் அரசாங்கம் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றை விசாரணையில் கலந்துகொள்வதற்காக மன்றுக்கு வருகைதந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,

தமிழ் அரசியல் கைதிகள் விடயங்களில் அரசாங்கம் தன்னுடைய கடமையை முறையாக மேற்கொள்ளவில்லை அதனால் தான் அவர்களின் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதேவேளை வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மதிய போசன இடைவேளைக்காக மன்றிருந்து வெளியேறிய அவர். அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை அடிமைகளாகவே நடாத்துகின்றது. அவர்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். பேச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டே செல்கையில் சிறைச்சாலை அதிகாரிகள் ஒளி,ஒலிபதிவு கருவிகளை தங்களுடைய கைகளினால் பலத்தடவைகள் மறைப்பதற்கு முயற்சித்தனர். அதற்கிடையில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கவேண்டாம். அவர்களின் பணிகளை செய்வதற்கு இடமளிக்கவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக