26 ஏப்ரல், 2011

தனியார்துறை, அரச கூட்டுத்தாபனங்கள் ஓய்வ+தியத் திட்டத்தை அமுல்படுத்த மூன்று நிதியங்கள் உருவாக்கம் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதியுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் மஹிந்த சிந்தனையின் எண்ணக்கருவில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.

தனியார்துறை மற்றும் அரசாங்ககூட்டுத் தாபன ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்காக மூன்று நிதியங்கள் அமைக்கப்படவுள்ளன.

தனியார் துறை ஊழியர்களுக்கு நன்மையடையக்கூடிய வகையில் ஓய்வூதியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவ தென்ற அரசாங்கத்தின் யோசனை குறித்து நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்த போதே இவ்வாக்குறுதியை அளித்தார்.

இந்த சந்திப்பின் போது தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களையும், யோசனைகளையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை உள்ளடக்கக்கூடிய வகையில் அரசாங்கம் விரைவில் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து மென்று கூறினார்.

நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகள் இந்த ஓய்வூதிய திட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றும், இந்த சந்திப்பிற்கான திகதியை கூடிய சீக்கிரத்தில் நிர்ணயித்த பின்னர் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைத்து பேசலாம் என்று ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தனியார் துறையினரையும் உள்ளடக்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத் துவதென்று அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த ஓய்வூதியத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தாங்கள் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஜனாதிபதிக்கு உறுதி மொழி அளித்தனர்.

வலுவான நிலைத்திருக்கக்கூடிய தனி யார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்வதே தனது நோக்கமென்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தத் திட்டம் இடை நடுவில் கைவிடப்படாதென்றும் உறுதியளித்தார்.

தனியார்துறையினருக்கும் ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பேன் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் அளிக்கப்பட்ட இன்னுமொரு வாக்குறுதியை ஜனாதிபதி அவர்கள் இதன்மூலம் நிறைவேற்ற உள்ளார். இந்த ஓய்வூதியத் திட்டத்தினால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை யர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுபவர் களும் நன்மையடைய முடியும்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் தனியார் ஊழியர்களுக்கான இந்த ஓய்வூதியம் பற்றிய கருத்துகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டர். இந்த ஓய்வூதியத்திட்டம் உழைக்கும் வர்க்கத்தின் வலுவை அதிகரித்து அவர் களுக்கு நல்வாழ்வைப் பெற்றுக் கொடுக்கு மென்றும் கூறினார்.

எனவே, எங்கள் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும், ஒத்துழைப் பையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

2020ம் ஆண்டளவில் எங்கள் நாட்டில் 60 வயதைக் கடந்த வயோதிபர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும், அன்றைய காலகட்டத்தில் வயோதிபர்களுக்கு இத்தகைய ஓய்வூதியத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையு மென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது அரசாங்கம் சமீபகாலமாக தனியார் துறையை வலுப்படுத்துவதற்கு பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அவர்களுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர இந்த உத்தேச ஓய்வூதிய திட்டம் பற்றிய விபரங்களையும், ->யி!ஞ் ஏற்படக்கூடிய நன்மைகளையும், எங்கிருந்து இந்த நிதி பெறப்படும் என்பது பற்றியும் விளக்கிக் கூறினார்.

சுமார் 150 தொழிற்சங்கப் பிரதிதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அமைச்சர்களான காமினி லொக்குகே, கலாநிதி சரத் அமுனுகம, டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன, விமல் வீரவங்ச, பசில் ராஜபக்ஷ மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக