26 ஏப்ரல், 2011

சிறுநீரக நோய்க்கான மருந்து தட்டுப்பாடின்றி விநியோகம்





சிறுநீரக நோயாளர்களுக்கு இரண்டு மாதங்களாகத் தட்டுப்பாடாகக் காணப் பட்டுவரும் மருந்தினை இன்று முதல் (26) தட்டுப்பாடின்றி வைத்திய சாலைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் அத்தியாவசிய மருந்து வகைகளில் ஒன்றான விஞிணீங்ச்ஙூஙீச்ஙுடுடூலீ எனும் மருந்தின் சுமார் மூன்று இலட்சம் மாத்திரைகள் நேற்று (25) மருந்து இறக்குமதி செய்யும் கம்பனிகளால் பெற்றுக் கொடுத்ததை அடுத்து இது வரையில் நிலவிவந்த தட்டுப் பாட்டிற்கு தீர்வுகாண முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறுநீரக சிகிச்சைகளை மேற்கொண்டுவரும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அளவு மருந்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு நேற்று (25) உத்தரவிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த மருந்தினை விநியோகிப்பதற்கான கேள்வியினைப் பெற்றிருந்த சிட்டி ஹெல்த் மற்றும் பாமா அசோசியேட்டட் எனும் இந்திய கம்பனிகள் உரிய நேரத்திற்கு மருந்தினை வழங்காமையால் இந்நிலை உருவானதாகவும், சிட்டி ஹெல்த் நிறுவனம் 250,000 மாத்திரைகளையும், பாமா நிறுவனம் 50,000 மாத்திரைகளையும் நேற்று (25) பெற்றுத் தந்ததாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக