26 ஏப்ரல், 2011

பகவானின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைப்பு இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைக்கப்படவுள்ளது. பகவானை தரிசிப்பதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியைச் சென்றடைந்தவண்ண முள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் பகவானின் ஸ்தூல சரீரத்தைத் தரிசித்து வருவதுடன், இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம், வெகுதூரத்திற்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தின் குல்வந்த் மண்டபத்தில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பகவானின் ஸ்தூல சரீரம் நாளை அந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் வைக்கப்படவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நான்கு நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், பக்தர்கள் பலர் தரிசனம் செய்வதற்கு முண்டியடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனைவியுடன் சென்று கண்ணீர் மல்க பகவானைத் தரிசித் திருந்தார்.

இதனைவிடப் பல முக்கிய பிரமுகர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தரிசித்திருப்பதுடன். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் புட்டபர்த்திக்குச் செல்வதால் புட்டபர்த்தியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புட்டபர்த்திக்கு வரும் பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரச அதிகாரிகளும், சத்ய சாயி அறக்கட் டளை நிர்வாகிகளும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளனர்.

இது மாத்திரமன்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பகவானின் பக்தர்கள் பலர் புட்டபர்த்தியை நோக்கிப் புறப் பட்டுள்ளனர். பகவான் சத்ய சாயி பாபா மகா சமாதியடைந்த செய்தியைக் கேட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வின் கோதாவரி மாவட்டம், பிரகாசம் மாவட்டம், புட்டபர்த்தி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய பகுதிகளில் நான்கு சாயி பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக