26 ஏப்ரல், 2011

சகல சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அரசுக்கு இருக்கிறது பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வோம்




புலிப் பயங்கரவா தத்தை ஒழித்ததைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வதற்காக அரசாங்கம் பலமிக்க முறையில் முகம் கொடுப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

இல்லாதொழித்த பயங்கரவாதத்திற்கு உயிர் கொடுக்க ஒரு சிலர் முயச்சித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அமைதியான சூழலிற்கு இட்டுச் சென்ற தைப் போன்றே அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றினை வெற்றிகொள் வதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு இருப்பதாக அமைச்சர் மேலும் வலி யுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ யுகமானது, பொரு ளாதாரம், அரசியல் ரீதியாக வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலகின் பலமிக்க நாடொன்றாக நாட்டு மக்களை கட்டி யெழுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்து வதற்கு முயற்சிப்பதானது இறந்த பயங்கர வாதிகளின் கனவுகளை நனவாக்குவதாகு மென அமைச்சர் மேலும் கூறினார்.

எமக்கு இன்று சிறந்ததொரு நாட்டுத் தலைவர் உள்ளார். நாம் எமது எதிர்கால சந்ததியினருக்காகவே இந்த அனைத்து அபிவிருத்தி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அமைச்சர் விளக்கிக் கூறினார்.

450 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கோமரன்கடவல வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இராணுவத்தின் உயிரை தியாகம் செய்து பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையே இன்று அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எனக் கூறிய அவர், தாம் கொழும்புக்குச் செல்வது மீண்டும் வீடு திரும்பும் நோக்கில் அல்லவெனவும் அன்று அந்தளவு பயங்கரவாதம் தலைவிரித்தாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் இன்று அந்நிலை முழுமையாக மாறியுள்ளதாகவும், அனைவரும் மனநிம்மதியுடன் வாழ்க்கை நடத்துவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக