26 ஏப்ரல், 2011

பகவானின் சரீரத்தை தரிசிக்க பெங்களூருக்கு விசேட விமான சேவை




பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா வின் ஸ்தூல சரீரத்தை தரிசிக்கச் செல்ல விரும்பும் பக்தர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

ட்டுநாயக்காவுக்கும் பெங்களூருக்கும் இடையில் ஏப்ரல் 26 ஆம் திகதியிலிருந்து மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமையவும், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்கவுமே பெங்களூருக்கு மேலதிக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட விருப்பதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் விசேட விமானங்களை வாட கைக்கு அமர்த்தி பெங்களூர் செல்ல விரும்பினால் அதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலதிக விமானங்கள், தனிப்பட்ட விமானங்களை வாடகைக்கு அமர்த்துவது மற்றும் விமான டிக்கட்டுக்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வ தாயின் 0197335500 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ள முடியுமென்றும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக