26 ஏப்ரல், 2011

மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் 16 பேர் பலியாகியுள்ள தாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி ஆனந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இம்மாதத்திலேயே மின்னல் தாக்கத்தினால் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையில் ஒன்பது பேர் மின்னல் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழைவேளைகளில் பொதுமக்கள் கூடுமானவரை வெளியில் இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தோடு அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவனையினை மேற்கொள்ளாமல் இருப்பதுவும் சிறந்ததாகும்.

அத்தோடு இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டிலும் அவதானமாக இருக்க வேண்டும். கூடுமான வரை மின்சாதனப் பொருட்களை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பது பாதுகாப்பானது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக