14 மார்ச், 2011

தமிழ் மக்கள் மீண்டும் பிரிவினைவாதிகளிடம் சிக்கிவிடக் கூடாது: சம்பிக ரணவக்க

தமிழ் மக்கள் மீண்டும் பிரிவினைவாதிகளிடம் சிக்கிவிடாமல் ஆளும் கட்சிக்கு இம்முறை மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வாழ்வாதாரத்தை மத்திய அரசாங்கமே வழங்க முடியும். இத் தேர்தலில் அரசாங்கத்தை தோல்லியடையச் செய்வதால் நட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

தமிழ்- சிங்கள மக்களிடையே தற்போத எந்தப் பிரச்சினையும் கிடையாது. எனவே இடம்பெயர்ந்த மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சுகந்திர முன்னணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக