14 மார்ச், 2011

பாம்பாட்டியின் உயிருக்கே உலைவைத்த நாகம்







பாம்பாட்டி யொரு வர் தான் ஆட்டிய பாம்பினா லேயே தீண்டப்பட்டு மரண மான சம்பவம் பது ளையில் நடந்துள்ளது.

இச்சம்பவம் குட்டிகலைப் பகுதியின் துங்கம என்ற இடத்தில் சனியன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மரணமானவர் எல். ஜேம்ஸ்ராஜா என்ற 35 வயது நிரம்பிய பாம்பாட்டி யாவார்.

இம் மரணம் தொடர்பாக பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில், சட்ட வைத்திய அதிகாரி பி. எம். எம். ஹேரத் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டிருந் தார். மரணம் தொடர்பாக இறந்தவரின் சகோதரரான எல். ராஜ்குமார் வயது 33 சாட்சியமளிக்கையில், “இறந்துள்ளவர் எனது சகோதரனாவார்.

வழமையாகவே பிடிக்கப்படும் பாம்புகளின் விஷப்பற்களை அகற்றியே, பெடடிக்குள் விடுவார். சம்பவதினம் புதிய நாகபாம்பொன்றைப் பிடித்து, அதன் பற்களைப் பிடுங்காமல் பெட்டிக்குள் போட்டுவிட்டார்.

சம்பவதினம், எனது சகோதரன் தொழிலை ஆரம்பிக்கும் வகையில் பெட்டிக்குள்ளிருந்த பாம்பை வெளியே இழுக்கும் போது, அப்பாம்பு அவரைத் தீண்டியுள்ளது. அதனையடுத்து அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லை என்றார்.

பலரது சாட்சியங்களைப் பதிவு செய்த மரண விசாரணை அதிகாரி, இறுதியில் பாம்பு தீண்டியதனால், உடம்பெங்கும் விஷம் பரவி, இம்மரணம் சம்பவித்துள்ள தென்று தீர்ப்பு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக