14 மார்ச், 2011

ஜனாதிபதி ஜப்பானுக்கு ஒரு மில்லியன் டொலர் உதவி விசேட மருத்துவ குழுவும் பயிற்சிபெற்ற முப்படை அணியும் அனுப்ப ஏற்பாடு




சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட் டுள்ள ஜப்பானிய மக்களின் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக பத்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக (கிட்டத்தட்ட 11 கோடி ரூபா) வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

இதற்குத் தேவையான நடவடிக் கைகள் எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தரவுக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

இலங்கை- ஜப்பான் நட்புறவை யும் இராஜதந்திர தொடர்புகளை யும் மேலும் பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் சுனாமி அனர்த்த த்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பா னிய மக்களின் வாழ்க்கை தரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக விசேட மருத்துவக் குழுவொன்றை யும் விசேட பயிற்சி பெற்ற முப்படை அணியொன் றையும் ஜப்பானுக்கு அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட் டுள்ள ஜப்பானிய மக்களை கூடிய விரைவில் சுமுக நிலைக்குட்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இது தொடர்பாக உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்துக்கும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது எமது நாட்டு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நட்பு நாடு என்ற ரீதியில் ஜப்பான் பாரிய அளவில் செயற்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக