14 மார்ச், 2011

உள்நாட்டில் எரிப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையினால் மசகு எண்ணெயின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்ற போதிலும் உள்நாட்டில் எரிப்பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியினால் மசகு எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் அதிரித்து கொண்டே செல்கின்றது. மசகு எண்ணெய் பெரலொன்று தற்போது 115 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

மசகு எண்ணெய் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், ஈரான் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பழைய விலையிலேயே எண்ணெயை இன்றும் கொள்வனவு செய்கின்றது.

தூரநோக்கில் சிந்தித்து செயற்பட்டமையினால் எரிப்பொருட்களின் விலைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக