23 பிப்ரவரி, 2011

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார்


கூட்டமைப்புடன் மார்ச் 1இல் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பேச்சு
வட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும் நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது தடவையாகப் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

அதேநேரம் வடபகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வி. ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கட்சிகளுடனும் பேச்சுவார்த் தைகள் நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களின் பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் போன்றோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சமயமே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் பூரண அமைதி நிலவிவருகிறது.

எனது அரசாங்கம் கடந்த காலத்தில் உரிமைகளை இழந்து துன்பத்தில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வீதித்தடைகளும், சோதனைகளும் நடத்தப்படுவதில்லை. அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டு, அப்பிரதேசங்களில் சென்று மக்கள் குடியேறவும் எனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாம் சகல தமிழ் கட்சிகளுடன் நாட்டில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கும், இனங்களிடையே ஒற்றுமை பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும், இதர தமிழ் கட்சியினருடனும் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலம் முன்வைத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால் அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தயா ராகவில்லை.

யுத்தம் முடிவடைந்த கால கட்டத்தில் எல்.ரி.ரி.ஈயின் கொடுமையிலிருந்து இராணுவத்தினர் மீட்டெடுத்த பிரதே சங்களுக்கு வந்து முகாம்களில் தங்கியிருந்த மக்களின் குறைபாடுகள் பலவற்றை எனது அரசாங்கம் இப்போது தீர்த்துவைத்து விட்டது.

நான் அவர்களை சமீபத்தில் சந்தித்த போது “ஜனாதிபதி அவர்களே, நாங்கள் இன்று நிம்மதியாக பூரண உரி மைகளுடன் இருக்கின்றோம். தயவுசெய்து எங்களை எங்கள் சொந்த இடங்களில் சென்று குடியமர்த்துங்கள். அதற்காக அங்கு எல்.ரி.ரி.ஈயினர் நாட்டிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றிவிட்டு எங்கள் வீடுகளை மீள் நிர்மாணம் செய்து அங்கு அனுப்பிவையுங்கள்" என்று கேட்கிறார்கள்.

மற்றவர்கள் கமத்தொழில் செய்வதற்கு விதைநெல், உரப்பசளை, உழவு இயந்திரங்களைப் பெற்றுத்தாருங்கள் என்று விடுத்த வேண்டுகோளுக்கு செவிமடுத்த எனது அரசாங்கம், அவர்களுக்கு இலகு கடனடிப்படையில் இலங்கை வங்கி மூலம் இதற்கான பண உதவியைச் செய்துள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக