23 பிப்ரவரி, 2011

மேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு




மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக