23 பிப்ரவரி, 2011

இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இலவச போக்குவரத்து ஏற்பாடு






இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட வாக்காளர்கள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்துச் சேவை நடத்தப்படவுள்ளது. இதற்காக 400க்கும் அதிகமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தினகரனுக்கு தெரிவித்தார்.

நேற்று தேர்தல் திணைக்களத்தில் கட்சித் தலைவர்கள், செயலாளர்களுடனான முக்கிய கூட்டம் ஒன்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலை மையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில்; இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்துவரும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர்; உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கொத்தணி வாக்கு சாவடிகளை அமைக்க சட்டத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள் ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இலவச போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யவும், இதற்கு ஏற்ப 400க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச போக்குவரத்துச் சேவையினை நடத்துவதற்காக சுமார் 400க்கும் அதிகமான வஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதற்கான உறுதிமொழியினை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தமக்கு வழங்கியுள்ளார் எனவும் அவர் தினகரனுக்கு மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக