23 பிப்ரவரி, 2011

குற்றச்சாட்டுகளுக்கு பயப்படும் அவசியம் எனக்குக் கிடையாது! ஜனாதிபதி




சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான சில கோஷ்டியினர் எமது நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய நோக்கத்துடன் தனக்கு எதிராக முப்பது மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டைக்கோரி வழக்கொன்றை தொடர்ந்துள்ளார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், குற்றம் இழைத்தவர்கள் தான் குற்றச்சாட்டுக்களைப் பார்த்துப் பயப்பட வேண்டும். நான் குற்றமிழைக்கவில்லை. அவற்றைப் பொருட்படுத்தவுமில்லை என்றும் கூறினார்.

இவ்விதம் நாட்டுக்குத் துரோகமிழைக் கும் புலம் பெயர்ந்த எல். ரி. ரி. ஈ. யைச் சார்ந்தவர்களுக்கு எதிராக இப்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. எல். ரி. ரி. ஈ.யினர் இப்போது கனடாவுக்கு ஒரு பெரும் தலையிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல். ரி. ரி. ஈ. யினர் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்யவோ அவற்றை குழப்பிவிடவோ எத்தனிக்கவில்லையென்று அறிவித்த ஜனாதிபதி அவர்கள், ஓரிரு சந்தர்ப்பங் களில் சிறு பிரச்சினைகள் ஏற்பட் டாலும் அரசாங்கம் எப்போதும் ஜன நாயக ரீதியிலான எதிர்க்கட்சியின் செற்பாடுகளை நிறுத்திவிட எத்தனிக்காது என்று கூறினார்.

சுதந்திரத்துக்குப் பலரும் பலவிதமான வியாக்கியானங்களை அளிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். ‘சிலர் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதினத்தையே சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள். இன்னுமொரு சாரார் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை சுதந்திர தினமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வேறுசிலர் பெப்ரவரி 4ஆம் திகதியன்று சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.

எது எவ்விதமிருந்தாலும் எதிர்க் கட்சியினர் சுதந்திர தினத்தை மதித்து அதில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக