23 பிப்ரவரி, 2011

பார்வதியம்மாள் பூதவுடல் நேற்று தகனம்






புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.நீண்ட நாட்களாக சுகவீனமுற்று வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்றுவந்த பார்வதியம்மாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அன்னாரது பூதவுடல் நேற்றுப் பிற்பகல்வரை தீருவில் மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 1.45 மணிக்கு ஆலயடியிலுள்ள அன்னாரின் வீட்டுக்குப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து ஊரணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக