23 பிப்ரவரி, 2011

இருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்




வெளிநாடுகளில் அரசுக்கும் நாட்டுக்கும் எதிராக பொய் பிரசாரம் செய்வதாக ஜனாதிபதி கவலைஇருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத் தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார்.

இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

பத்திரிகை ஆசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த மக்களை இலங்கைக்குத் திரும்பி இங்கு குடியிருங்கள் என்று நாம் திறந்த மனத்துடன் அவர்களை அழைக்கிறோம். ஆனால், அவர்கள் அதற்குச் செவிமடுக்கத் தயங்கி வெளிநாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் எதிராக போலிப் பிரசாரங்களை செய்து வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியை இலங்கைக் கடற்படையினர் 70 இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இதன் உண்மை நிலை என்னவென்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், செய்மதி புகைப்படங்களிலிருந்து கூட இதற்கான எவ்வித ஆதாரங்களும் கொடுக்கப்படவில்லை. இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே புகார் கிடைத்துள்ளது என்றும் அதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் கூறினார்.

இப்போது இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. இதனால் தேர்தல் தந்திரமாக இத்தகைய போலி வதந்திகளை சிலர் கிளப்பிவிடுவதைப் பார்த்து நாம் அநாவசியமாக பதற்றமடைவது அவசியமில்லையென்று ஜனாதிபதி அவர்கள் பதிலளித்தார்.

இன்னுமொரு பத்திரிகை ஆசிரியர், லங்கா ஈ-நியூஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பி இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதாகவும், ‘பூத்தையா’ தான் (பேய்) இதனை செய்ததாகப் புலன்விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது. இந்த பூத்தையாவுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு இப்போது ஓரளவுக்குத் தெரியும்.

அவர்கள் யார் என்பதை நான் இப்போது இங்கு வெளியிட்டால் பத்திரிகை சுதந்திரத்தில் நான் தலையிடுகிறேன் என்று சிலர் குறை கூறுவார்கள் அதனால் மெளனமாக இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன் என்று ஜனாதிபதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக