8 பிப்ரவரி, 2011

தபால் சேவைகள் பாதிப்பு: தேங்கிய நிலையில் பொதிகள்






நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான தபால் நிலையங்களில் பெருமளவு கடிதங்கள் விநியோகிக்கப்படாமல் குவிந்து கிடப்பதாக தபால் திணைக்களம் கூறியது.

தபால் நிலையங்கள் மட்டுமன்றி வீதிகள் வீடுகள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளதால் கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது.

வெள்ளம் வடிவதோடு அவற்றை துரிதமாக விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அடை மழை காரண மாக வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன. இப்பகுதிகளில் விநியோகம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய பிரதேசங்களிலும் தபால் விநியோகிப்பதில் ஓரளவு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக