8 பிப்ரவரி, 2011

வெள்ளத்தால் மன்னாரில் 4ஆயிரத்து 427 பேர் இடப்பெயர்வு

தொடரும் மழையால் மன்னார் மாவட்டத்தில் 1ஆயிரத்து 376 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளிலும், ஆலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மன்னார் உயிலங் குளம் பாடசாலையில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேரும் ,மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேரும், மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லுரியில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேரும், மன். அல் அஸ்கர் ம.வி பாடசாலையில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 532 பேரும், மன்.தாராபுரம் ம.வி பாமசாலையில் 117 குடும்பங்களைச்சேர்ந்த 384 பேரும், மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 933 பேரும், மன்னார் திருக்கேதிஸ்வர ஆலையத்தில் 520 குடும்பங்களைச் சேர்ந்த 1ஆயிரத்து 700 தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக மன்னார் மதவாச்சி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக