14 டிசம்பர், 2010

ரூ. 207 கோடியில் யாழ், கிளிநொச்சியில் பாரிய குடிநீர்திட்டம் மூன்றரை இலட்சம் மக்களுக்கு நன்மை


207 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாரிய குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றரை இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பல்கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய குடிநீர் விநியோகத் திட்டத்தின் முதற்கட்டம் 2015ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளது.

இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இதற்கான பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி, நாவற்குழி, நல்லூர், கோப்பாய், கரவெட்டி, சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், அச்சுவேலி, ஆவரங்கால், பருத்தித்துறை, பளை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, மருதங்கேணி தீவுப்பகுதிகள் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதன் மூலம் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.

இரணமடு நீர்த்தேக்கத்திலிருந்து தண் ணீர் கொண்டு செல்லப்பட்டு பரந்தன் பகுதியில் வைத்து பம்ப் பண்ணப்பட்டு பரந்தன் மற்றும் பளை பகுதியிலுள்ள தேக்கங்களில் வைத்து சுத்திகரிக்கப்பட்ட பின்னர் யாழ் குடா நாட்டிற்கும், கிளி நொச்சிக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நீர்விநி யோகத் திட்டம் 20,000 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜய்க்கா போன்றன இதற் கான நிதியுதவிகளை வழங்கவுள்ளன. இதன் மூலம் 3 இலட்சம் மக்கள் நன்மையடைய வுள்ளனர்.

பருத்தித்துறை நீர்விநியோகத்திட்டம் ஐ.எப்.ஆர்.சி மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வுள்ளன. இதற்கென 515 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனர்.

வல்வெட்டித்துறை நீர்விநியோகத் திட்டம் உலக வங்கியின் 225 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட வுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் மக் கள் நன்மையடையவுள்ளனர் என்றார்.

இதேவேளை, மருதங்கேணியிலுள்ள 10 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் விநியோகிக் கும் பொருட்டு 25 மில்லியன் ரூபாவும், நெடுந்தீவிலுள்ள 4 ஆயிரம் குடும்பத்திற் கென 12.75 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்குத் தேவையான சகல ஆலோசனைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் வழங்கி வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக