14 டிசம்பர், 2010

மூத்த பத்திரிகையாளர் டேவிட் ராஜு காலமானார்




















வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியரா கவும் பிரதி ஆசிரி யராகவும் இருந்து அப்பத்திரி கையின் வளர்ச்சிக்கு 1952ம் ஆண்டு முதல் 1984 வரை மகத்தான பணியாற்றிய திரு. ஈ.வி. டேவிட் ராஜு நேற்று முற்பகல் கொழும்பிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மரணமானார். இறக்கும்போது இவருக்கு வயது 75 ஆகும்.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வேலணையை பிறப் பிடமாகக்கொண்ட டேவிட் ராஜு, கண்டி மாநகரில் அலுவலக நிருபராக பணி யாற்றிய பின்னர் 1954ல் ஆசிரிய பீடத்தில் சேர்ந்து கொண்டார்.

1984ல் இருந்து 2002 வரை சவூதி அரேபி யாவில் மன்னர் மாளிகையில் பணியா ற்றிய இவர், 2002ல் நாடு திரும்பிய பின்னர் தினக்குரல் பத்திரிகை யில் செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறையில் ஆலோச கராக பணியாற்றினார். வீரகேசரி யில் கலாமன்றம் என்ற பகுதியின் மூலம் கலை, இலக்கிய, நாடகத்துறைக்கு டேவிட் ராஜு பெரும்பங்க ளிப்பு செய்தார்.

இவரது பிள்ளைகள் வெளிநாட்டில் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக