14 டிசம்பர், 2010

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வ+தியத் திட்டம் ஆவணங்கள் நிதியமைச்சிடம் கையளிப்பு - ஜனாதிபதி






சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களுக்கு ஓய்வூதியத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான ஆவணங்களை நிதியமைச்சுக்குக் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சமுர்த்தி உத்தியோக த்தர்கள் ஓய்வு பெற்றதும் அவர்களை சமுர்த்தி உதவி பெறுவோர் அணியில் இணைய இடமளிக்கமாட்டோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 11 வது வருடாந்த மாநாடு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்;

திட்டமிட்ட செயற்பாடுகளின் மூலம் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எதிர்காலத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுமையாக அழிக்கப்பட்டி ருந்தன. அப்பிரதேசங்களை நாம் மீள கட்டியெழுப்பி வருகிறோம். 30 வருடகாலம் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தலை நிமிர்வதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும். ஏனைய பிரதேச மக்கள் போன்று சுதந்திரமாக வாழக்கூடிய உரிமையையும் சூழலையும் அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும். அதனை நாம் நிறை வேற்றுவோம்.

2012 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டில் சகல கிராமங்களுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் வீதிகள், பாட சாலைகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மீள கட்டியெழுப்புவோம். பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எதிர்கால சந்ததிக்கான முதலீடுகளாகும்.

போதைப்பொருள் மூலம் இருவர், மூவர் கோடீஸ்வரராகின்றனர். எனினும் இலட்சக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் அதற்குப் பலியாகின்றனர். அவ்வாறு இளைஞர்கள் பலியாவதைத் தடுப்பதா. அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதா என்பதே எம்முன் எழும் கேள்வியாகும். நாட்டை இந் நிலையிலிருந்து மாற்ற வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் நாடு பயங்கரவாத யுத்தத்தை எதிர்கொண்டது. சமூகங்கள் அச்சத்தில் வாழ்ந்த யுகம் அது. நாம் அந்த சூழலை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தோம். மக்களின் சுதந்திரத்திற்காக எமது சுதந்திரத்தை இழந்தோம். எனினும் இன்று நாம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி னோம் என்ற திருப்தியை அடைய முடிகிறது.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு மிக நெருக்கமாக சேவை செய்யக்கூடியவர்கள் நீங்களே. இன்று சிலர் தமக்கான பொறுப்பினை மறந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு முன்வராத தொழிற்சங்கங்கள் இன்றுள்ளன. சில தொழிற்சங்கத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை வழங்கக்கூடாது என்கின்றனர். அதற்கான கடிதங்களை அனுப்புகின்றனர். அத்தகையோருக்கு அங்கு பெருமளவு பணம் கிடைக்கின்றது.

அவர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக்கொடுப்பவர்கள். நாம் எங்கு சென்றாலும் நாட்டிற்கு கெளரவமளிப்பவர்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வில் மேற்படி தொழிற்சங்க ஊழியர்கள் சிலருக்கு கடன் உதவிகளும் சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக