14 டிசம்பர், 2010

சரணடைந்த புலி உறுப்பினர்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் செயலமர்வு









விடுதலை புலிகள் இயக்கத்;திலிருந்து சரணடைந்த முன்னாள் போராளிகளை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இதுதொடர்பாக ஆராயும் சமய சமூக தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் ஆரம்பமான இச் செயலமர்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட பிரிகேடியர் மஹிந்ந முதலிகே பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சமய தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக