7 செப்டம்பர், 2010

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று






நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா இன்று 7ம் திகதி காலை ஏழு மணியளவில் நடைபெறுகிறது. தற்போதைய சுமுகமான சூழ்நிலையில் நாடெங்கும் இருந்து பெருந்தொகையான மக்கள் நல்லூர்க் கந்தன் உற்சவத்துக்கு வருகை தந்திருப்ப தனால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை யாழ். மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குடிநீர், மலசல கூட வசதிகள் என்ப வற்றையும் மாநகர சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் முக்கியமான சில இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைத்துள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியால யத்தில் திருவிழாக் காலத்திற்கான தற்கா லிக பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் விசேட சேவைகளை நடத்துகின்றன.

தென் இலங்கையில் உள்ள பெருமளவு வர்த்தக நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஆலய வீதிகளில் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. தாகசாந்தி நிலை யங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக