16 ஜூன், 2010

தமிழர் விவகாரம்:ஆய்வு செய்கிறார் ஐ.நா., உயரதிகாரி


நியூயார்க்:இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., உயரதிகாரி லின் பாஸ்கோ இலங்கை புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போருக்கு பின், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி தற்போது அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வு, மறு குடியமர்த்தல், மனித உரிமை மீறல், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஐ.நா., அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் லின் பாஸ்கோ, நியூயார்க்கில் இருந்து நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.இலங்கையில் அதிபர் ராஜபக்ஷே மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் இதுகுறித்து விரிவான ஆலோசனை நடத்துவார் என, ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக