16 ஜூன், 2010

மன்னிப்பு தந்துவிட்டதால் சென்னை கோர்ட்டில் தொடரப்பட்ட என் மீதான வழக்கு செல்லாது: டக்ளஸ் தேவானந்தா சொல்கிறார்


இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா நிருபர்களிடம் கூறியதாவது:-

1986-ல் இடம் பெற்ற சென்னை சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் 1987-ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி எனக்கு இலங்கை ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டது.

1990-ம் ஆண்டு மே மாதம் நான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது இது தொடர்பான ஆவணத்தில் கையெத்திட்டேன்.

முன்னாள் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் விஷயத்தில் இலங்கைக்கு இந்திய அரசு உதவும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1989 முதல் 1990 வரையான காலப்பகுதிகளில் சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இருந்தபோது மேற்படி வாசகத்தை எனது வக்கீல் எனக்கு வாசித்து காட்டினார். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து எனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை.

அதன்பின்னர் சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சென்னையிலோ அல்லது வேறெந்த இடத்திலுமோ எவரும் பிரச்சினை கிளப்ப வில்லை.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் நான் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக பல தடவைகள் இந்தியா சென்று வந்துள்ளேன்.

குறுகிய அரசியல் காரணங்களுக்காகவே இந்த விஷயம் இப்போது மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது செல்லுபடியற்ற ஒரு வழக்கு. இது தொடர்பில் என்னை சென்னை நீதிமன்றத்திலோ அல்லது இலங்கை நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக