16 ஜூன், 2010

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இருவர் பலி



மனோக்வாரி, ஜூன் 16: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இருவர் பலியாகியுள்ளனர். புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

யாபென் தீவில் தென்கிழக்கு கடற்கரையோரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால், வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர். சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

70,000 மக்கள் தொகையைக் கொண்ட இத்தீவில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பாதுகாப்பான இடத்துக்கு மக்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் சுனாமி எச்சரிக்கையை இந்தோனேசிய அரசு ஒரு மணி நேரத்தில் விலக்கிக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக