5 ஜூன், 2010

உலக சுற்றாடல் தினம் கூறும் 'அனைத்து உயிர்களினதும் எதிர்காலம்'

ஐக்கிய நாடுகள் சபையால் 1972 ஆம் ஆண்டு 'உலக சுற்றுச்சூழல் தினம்' அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதியன்று உலக நாடுகளால் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2010 ஆம் வருடம் இவ் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் உலகில் பல உயிரினங்கள் , ஓர் உலகம் ஓர் எதிர்காலம் , என்பதாகும். அதாவது உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு எதிர்காலம் என்பதாகும்.

நீர், காற்று ஆகியவற்றில் பரவும் மாசு, அழிந்து வரும் இயற்கை வளங்கள் போன்றவற்றின் காரணமாக, பூமியில் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப் படுகிறன்றமையே இதன் தார்மீக குறிக்கோளாகும்.

குறிப்பாக, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் சீதோஷ்ண நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பூமியில் வெப்பம் அதிகரித்து வருவதால் பேரபாயம் நேரிடும் வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கும் இந்தத் தருணத்தில், இயற்கையைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு அனைவர் மத்தியிலும் திணிக்கபட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

ஒரு மனிதன் தான் சிறப்பாக வாழ வேண்டுமாயின் முதலில் அவனைச் சுற்றியுள்ள சூழல் சிறப்பாக . இருக்க வேண்டும் இதற்காகவே சிந்தனையின் பிறப்பிடத்திலேயே மனிதனிடம் சுழல் பற்றிய நல்லெண்ணங்கள் வார்க்கப்படுகின்றன.

இன்று உலகாளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்கள் ஒவ்வொன்றும் உலகில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களை எமக்கு தெளிவு படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதையொட்டி, பல்வேறு விழிப்பு உணர்வு முகாம்கள், பேரணிகள், மாணவர்களுக்கு கலைப் போட்டிகள், மரம் நடும் விழாக்கள் போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை அனைத்து நாடுகளும் நடத்தி வருகின்றன. குறிப்பாக, இந்த விழிப்பு உணர்வு பணியில் கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வருடம் மிகப்பெரும் சர்ச்சைகளில் மாசுபடும் சுற்றாடல் மெக்ஸிக்கோ கடல்பரப்பில் ஏற்பட்ட குழாய் உடைப்பினால் ஏற்பட்டு வரும் எண்ணெய்க் கசிவாகும்.

தவிர இவ்வருடம் ஆரம்பம் முதலே பல சுற்றாடல் சார் அழிவுகள் முதலில் இந்தோனேசியாவின் ஹெய்ட்டி நகரில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்வு , அமெரிக்காவில் உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி , என்பனவே இம்முறை சுற்றாடல் தினத்தின் பிரதான பங்காளிகள் எனலாம்.

காலம் காலமாக இடம்பெற்று வரும் சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருளை அனுஷ்டிப்பதற்கு பிரதான பங்காளியாக தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் போன்ற ஊடகங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை காலம் உணர்த்தும் உண்மை எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக