5 ஜூன், 2010

இஸ்ரேல் மனித உரிமை மீறல் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் தலைவராக பாலித கொஹன

பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளினால் பலஸ்தீன மக்கள் மற்றும் ஏனைய அரேபியர்களுக்கு எதிர்நோக்கி வரும் உரிமை மீறல்கள் தொடர்பில் பாலித கொஹணே தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தக் குழு விஜயங்களை மேற்கொள்ள உள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் விசாரணைக் குழு 1968ம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரிய மலைப்பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் விகிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக