5 ஜூன், 2010

பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்படன் சுற்றுவட்டம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்ட தெவட்ட கஹ பள்ளிவாசலில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஒன்றினைந்த முஸ்லிம்கள் பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து பல பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மன் உட்பட பல முன்னாள் அரசியல் தலைவர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பல அரசியல் கட்சிகளசை; சேர்ந்த அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக