5 ஜூன், 2010

தமிழ் மக்களின் நலன் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது


சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா இன்று டன் முடிவடைகின்றது. தென்னிந்தியத் திரையுல கத்தின் தீவிரமான எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங் கையில் இவ்விழா நடைபெறுகின்றது.

விழா நடைபெ றாமல் தடுப்பதற்குத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலிக்கவில்லை. பல முன்னணி இந்தி நட்சத் திரங்களின் பங்கு பற்றுதலுடன் இன்று மூன்றாவது நாளாக இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

இலங்கையில் ‘அய்ஃபா’ விழாவை நடத்தக் கூடாது என் றும் இங்கு நடைபெற்றால் இந்திய நட்சத்திரங்கள் அதில் பங்குபற்றக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்த தமி ழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக வன்முறை சார்ந்த செயற்பாடுகளி லும் ஈடுபட்டார்கள்.

இலங்கைத் தமிழருடனான ஒரு மைப்பாட்டை வெளிப்படுத்தும் செயல் என்று தங்கள் நடவடிக்கைக்கு இவர்கள் அர்த்தம் கற்பிக்கின்ற போதி லும் அது இலங்கைத் தமிழருக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத செயல். உண்மையில் இது இலங் கைத் தமிழருக்குப் பாதகமான செயற்பாடு.

இலங்கைத் தமிழரின் நலன் விரும்பிகள் எனத் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்களிலும் வன்முறைச் செயற்பாடுகளிலும் ஈடுபடும் தமிழகத் திரையுலகப் பிரமுகர்கள் இலங்கையின் இனப் பிரச்சி னையையும் அதன் இன்றைய நிலையையும் சரியாக விளங்கிக்கொண்டவர்களாகத் தெரியவில்லை.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக் குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டும். தனிநாடு அமைப்பது எவ்விதத்திலும் சாத்தியமாகாது. அரசாங்க த்துடனான பேச்சுவார்த்தைக் கூடாகவே ஐக்கிய இலங் கையில் அரசியல் தீர்வைக் காண முடியும்.

அரசாங் கம் மாத்திரமன்றிச் சிங்கள மக்களும் இத்தீர்வு முயற்சி யில் சம்பந்தப்படுகின்றனர். தீர்வு ஆலோசனைகள் பாரா ளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதோடு சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.

எனவே அரசாங்க த்துடன் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நிலைப் பாட்டில் நின்றுகொண்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் தான் தமிழ் நாட்டில் பெரிதாகக் குரல் கொடுக்கின்றார்கள். அரசி யல் தீர்வுக்கான போராட்டத்தைப் புலிகள் திசை திருப் பித் தனிநாட்டுப் போராட்டமாக மாற்றியதன் விளை வாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் இழப் புகளும் சொல்லி முடியாதவை.

பல கோடி ரூபா பெறு மதியான சொத்துகள் அழிந்துவிட்டன. பல்லாயிரக்கண க்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. இவைதான் தனிநாட்டுப் போராட்டம் தமிழ் மக்களுக்குக் கொடுத்த பரிசு.

கடந்த காலத் தவறுகளை மறந்து, அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ்த் தலைவர்கள் இப்போது ஈடுபட்டி ருக்கின்றனர். இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து அம் முயற்சிக்கு ஆதரவுக் கரம் கொடுப்பது தான் இல ங்கை வாழ் தமிழ் மக்களின் நலன் மீதுள்ள அக்கறை யின் வெளிப்பாடாக அமையும்.

தமிழ் மக்களுக்கு இழ ப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்திய தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் செயற்பாடுகள் வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களைத் திருப் திப் படுத்தலாமேயொழிய, இலங்கைத் தமிழருக்கு எவ் விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை.

நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்குச் சாதகமான செய ற்பாடுகளையே தமிழகத்திலிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக