19 ஏப்ரல், 2010

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்




கைத்தொழில்துறையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை - யாழ். தளபதி
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பனை, வலை பின்னல், படகு கட்டும் தொழிற் சாலை, கடல்சார் உணவு மற்றும் கைத் தொழில் பேட்டை என்பனவே ஆரம்பிக் கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை, சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியைப் போன்று வடபகுதிக்கும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதுடன் அதனை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. யாழ். மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை பாரிய அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக