4 ஏப்ரல், 2010

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை


காத்தான்குடிப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாதர் அணிக்கான கிழக்கு மாகாண அமைப்பாளரான ஜனாபா ஸ்ல்மாஹம்ஸாவின் பிரசார வாகணம் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வாகணம் காத்தான்குடி சேர்மன் இப்றாகிம் சதுக்கத்திலுள்ள குறித்த மாநகர் அமைப்பாளரின் வளவில் அதிகாலை ஒரு மணியளவில் நிறுத்திவைத்து விட்டு உறக்கத்தில் இருந்த வேளை இனம் தெரியாத குழுவினரால் எரித்து முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.

குறித்த மாதர் அமைப்பாளர் இப் பகுதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல வேட்பாளரும் முன்னாள் அமைச்சரின் சகோதரியென்றும், இத் தேர்தலில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்து வருபவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனம் எரியுண்ட இடத்தில், கைவிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ள இரு சோடி ஆண்பாதணிகளை காத்தான்குடி பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதனை வைத்து மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மட்டகளப்பு பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஏ மார்கின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக