19 டிசம்பர், 2010

இராணுவ சீறுடையில் வந்தோரால் மட்டக்களப்பில் இருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு ஆயித்தியமலை கற்பானைக்குளத்தைச் சேர்ந்த இருவர், இராணுவச் சீருடையில் வந்தவர்களால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவ ஜீப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இவர்களை அழைத்துச் சென்றதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

பேரின்பராசா தவசீலன் பேரின்பராசா திருக்கேஸ்வரன் ஆகியோரே இவ்வாறு அழைத்துச் செல்லப்ட்டவர்களாவர்.

இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட ஒருவரின் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உறவினர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்தாகத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக