19 டிசம்பர், 2010

சென்னையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 5 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்

சென்னையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகள் 5 பேர் பிடிபட்டனர். ஈச்சம்பாக்கம் அனுமன் கொலனி அருகே இலங்கைத் தமிழர்கள் 10 பேர் ஒரு வேனை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் அங்கு வந்ததும், அவர்களில் 5 பேர் தப்பிவிட்டனர்.

ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ்மாரியா, சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாங்கள் அங்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம் பேட்டுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வான் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இது போன்று பலமுறை இலங்கைத் தமிழ் அகதிகளை பிரகாஷ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று பிகாரஷ் தங்களிடம் கூறியுள்ளதாக பிடிபட்ட 5 பேரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கைது செய்த நீலாங்கரை பொலிஸார் கியூ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய 5 பேரை பிடிக்கவும், இவர்களை அவுஸ்திரே லியாவுக்கு அனுப்பி வைப்பதாக பணம் பறித்த பிகாஷையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக