19 டிசம்பர், 2010

யாழ்.தமிழ் முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியமர்த்த திட்டம்


யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களை மீள்குடிய மர்த்துவதற்கான துரித செயற் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகக் கைத் தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரி வித்தார்.

முதற் கட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில், சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, அரசாங்கத்தின் செயற் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த் திருப்பதாக அமைச்சர் தினகரனுக்குக் கூறினார்.

குறிப்பாக முஸ்லிம்தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடனும் விரைவில் நாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அவர்களையும் இணைத்துக் கொண்டு

இம்மீள்குடியேற்றங்களை முன் னெடுக்கவே நாம் எதிர்பார்த் துள்ளோம். தமிழ் முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்தில் காணப்படும் தடைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களின் மீள் குடியேற் றங்களைத் துரிதமாக முன்னெடுப் பதற்குப் போதிய உதவிகள் போது மானதாக இல் லாத போதும் அவற்றை வெற்றிக் கொண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக் களை சொந்த மண்ணில் மீள்குடி யேற்றுவதற்கான அனைத்து நட வடிக்கையும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக